×

நாகர்கோவிலில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகர்கோவில், டிச.22: குமரி மாவட்ட கலெக்டர் தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: டிசம்பர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் டிசம்பர் 22ம் தேதி (இன்று) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நவம்பர் 2023 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். மாவட்ட கலெக்டர் தர், நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாகர்கோவிலில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari District ,Collector ,thar ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் டெப்போ முன் பி.எம்.எஸ். ஆர்ப்பாட்டம்